- Central Marine Fisheries Research Institute (CMFRI) வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் கடல்சார் மீன் பிடிப்பில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
- மீனவர்கள் சுமார் 6.85 லட்சம் டன் மீன்களை கரைக்கு கொண்டு வந்துள்ளனர். இது 2024ஆம் ஆண்டின் 6.79 லட்சம் டனை விட 1% அதிகமாகும். மொந்தா (Montha) மற்றும் டிட்வா (Ditwah) என்ற இரண்டு புயல்கள் மீன்பிடித் தொழிலை பாதித்திருந்தபோதிலும் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
- ஆய்வின் படி, தமிழ்நாடு குஜராத்தை முந்தியுள்ளது. குஜராத்தில் இந்த ஆண்டு 6.43 லட்சம் டன் மீன் மட்டுமே இறக்கப்பட்டது; கடந்த ஆண்டு அது 7.54 லட்சம் டன் இருந்தது. மோசமான வானிலை மற்றும் “ஆப்பரேஷன் சிந்தூர்” காரணமான மீன்பிடித் தடையால் மீன்பிடி நாட்கள் குறைந்ததே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டில் மொத்த மீன் இறக்குமதியில் 71.7% இயந்திரப் படகுகள் மூலம், 28.2% மோட்டார் பொருத்தப்பட்ட படகுகள் மூலம், 0.1% மோட்டார் இல்லாத படகுகள் மூலம் கிடைத்தது.
- மாவட்ட வாரியாகக் கணக்கிடும்போது, கன்னியாகுமரி மாவட்டம் 23% பங்குடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து தூத்துக்குடி 16% மற்றும் புதுக்கோட்டை 14% பங்குகளை பெற்றுள்ளன. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகம் மட்டும் மொத்த இறக்குமதியின் சுமார் 12% அளவிற்கு பங்களித்துள்ளது.
- “மத்தி” எனப்படும் லெசர் சார்டைன் மீன், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகமாகப் பிடிக்கப்பட்ட மீனாக உள்ளது. இதன் இறக்குமதி 9% குறைந்திருந்தபோதிலும், 0.70 லட்சம் டன் பதிவாகியுள்ளது. சுமார் 45,000 டன் கணவா மீன் மற்றும் ஆக்டோபஸ் போன்ற செஃபலோபாட்கள் பிடிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து 38,000 டன் அளவில் அயிலா அல்லது காணாங்கெளுத்தி மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன. பொடி மீன் மற்றும் நெத்திலி மீன்களும் அதிக அளவில் பிடிக்கப்பட்டுள்ளன.
சவால்கள்
- மீன்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) நிர்ணயிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாநில அரசிடம் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மீன் விற்பனை நிலையங்களே உள்ளன. மேலும், துறைமுகங்களில் மீன்களை சேமித்து வைக்கும் வசதிகளும் இல்லை.
- சென்னை துறைமுகத்தில் இருந்து பிடிக்கப்படும் மீன்கள் கேரளா மற்றும் பிற பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் அங்குள்ள மீன்பிடித் துறைமுகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குடிநீர், கழிப்பறை, மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. துறைமுக நீர் மிகவும் மாசடைந்துள்ளது; நீண்ட காலமாக அடித்தள சுத்திகரிப்பு செய்யப்படவில்லை. மீனவர்கள் அதே நீரையே அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.